தமிழ்நாடு செய்திகள்

6 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு துரைமுருகன் வீட்டில் தொடங்கியது "ரெய்டு"

Published On 2025-01-03 14:54 IST   |   Update On 2025-01-03 16:57:00 IST
  • அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • வீட்டில் ரெய்டு நடத்தி கொள்ளலாம் என கதிர் ஆனந்த் மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று காலை அமலாக்க துறையினர் சோதனை நடத்த சென்றனர்.

ஆனால், அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் குடும்பத்தினர் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 6 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை தொடங்கியது.

அமைச்சர் வீட்டு சாவி இல்லாமல், காத்திருந்த அதிகாரிகள்- வேலூர் துணை மேயர் கொண்டு வந்த சாவியை வைத்து திமுக நிர்வாகிகள் சிலர் முன்னிலையில் வீட்டை திறந்து சோதனையை தொடங்கினர்.

இந்த வீட்டில் அமைச்சர் துரைமுருகனும், அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் இருவரும் வசித்து வருகின்றனர்.

இது குறித்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வீட்டில் ரெய்டு நடத்தி கொள்ளலாம் என கதிர் ஆனந்த் மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News