தமிழ்நாடு செய்திகள்

வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை - துரை வைகோ திட்டவட்டம்

Published On 2025-04-20 10:32 IST   |   Update On 2025-04-20 10:32:00 IST
  • மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
  • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான் என மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக எம்.பி. துரை வைகோ கூறுகையில்,

* வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை.

* மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.

* ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.

* ம.தி.மு.க.வுக்காகவும், வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்று கூறினார்.

Tags:    

Similar News