தமிழ்நாடு செய்திகள்

ம.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து கோபித்துக்கொண்டு கிளம்பிய துரை வைகோ

Published On 2025-04-12 12:29 IST   |   Update On 2025-04-12 12:29:00 IST
  • காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.
  • 'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.

சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற துரை வைகோ கூட்டம் முடியும் முன்பாகவே திடீரென கோபித்துக்கொண்டு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.

'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.

'அவன வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போறேன்' என துரை வைகோவிடம் தொண்டர் ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News