தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி பண்டிகை... ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Published On 2025-08-17 09:00 IST   |   Update On 2025-08-17 09:00:00 IST
  • சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
  • இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெறுகிறது.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பங்களுடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரெயில்களில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

அக்டோபர் 19-ந்தேதிக்கான ரெயில் முன்பதிவு வருகிற புதன்கிழமையும், தீபாவாளி நாளான அக்டோபர் 20-ந்தேதிக்கான முன்பதிவு வருகிற வியாழக்கிழமையும் தொடங்க உள்ளது. 

Tags:    

Similar News