தமிழ்நாடு செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ வைரல்
- ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
- உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் ஆபாச நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
கோவில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் வீட்டில் மது அருந்து ஆபாச நடனம் ஆடினர்.
அர்ச்சகர்களின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தற்காலிக அர்ச்சகர்கள் உட்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரிய மாரியம்மன் கோவிலில் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரும் பூஜையில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய கோவில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.