தமிழ்நாடு செய்திகள்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திண்டுக்கல் டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-04-04 14:50 IST   |   Update On 2025-04-04 14:50:00 IST
  • கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது.
  • வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது இவர் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.

ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், டி.எஸ்.பி. கண்ணன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News