தமிழ்நாடு செய்திகள்
திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை - கணவர் கைது
- வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
- கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, அவரது கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார். ஸ்டீபன்ராஜை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.