தமிழ்நாடு செய்திகள்

644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-22 11:48 IST   |   Update On 2025-08-22 11:48:00 IST
  • கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம், 66 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
  • 182 உதவி மருத்துவ அலுவலர்கள், 48 பல் மருத்துவர் பணிக்கு தேர்வானோருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* ரூ.104.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை திறந்து வைத்தார்.

* கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம், 66 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

* 4 புதிய நூலக கட்டடங்கள், 49 பொது விநியோக கடைகள் உள்ளிட்ட பல திட்டங்களை திறந்து வைத்தார்.

* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வான 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

* மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

* 182 உதவி மருத்துவ அலுவலர்கள், 48 பல் மருத்துவர் பணிக்கு தேர்வானோருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

* 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், 18 உளவியல் உதவி பேராசிரியர்களுக்கான ஆணையை வழங்கினார்.

* 54 வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், 17 மருந்து ஆய்வாளர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

Similar News