தமிழ்நாடு செய்திகள்

51-வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவிக்கிறார்

Published On 2024-12-23 11:36 IST   |   Update On 2024-12-23 11:36:00 IST
  • பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

சென்னை:

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவுநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News