தமிழ்நாடு செய்திகள்

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருதரப்பினர் இடையே மோதல்

Published On 2025-07-05 07:36 IST   |   Update On 2025-07-05 07:36:00 IST
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த இருதரப்பினர் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News