தமிழ்நாடு செய்திகள்

20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Published On 2025-08-15 16:53 IST   |   Update On 2025-08-15 16:53:00 IST
  • தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
  • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இந்த நிலையில், 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாகை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், கோவை, , தேனி, திருநெல்வேலி , தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tags:    

Similar News