தமிழ்நாடு செய்திகள்

சோதனை நடந்த வீடு.

காட்பாடி தொழிலதிபர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை

Published On 2025-09-12 13:47 IST   |   Update On 2025-09-12 13:47:00 IST
  • சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர்.
  • வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஜெயராஜ். அரசு மற்றும் தனியார் ஒப்பந்த தொழில் செய்து வருவகிறார். இவர் இரிடியம் விற்பனை செய்வதாக புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர். அப்பகுதியில் ஜெயராஜுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திடீரென்று சோதனை நடத்தினர்.

வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தனர். 

Tags:    

Similar News