தமிழ்நாடு செய்திகள்
விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் 3 வாலிபர்கள் பலி
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளர்நல்லூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (19), ஆதினேஷ் (22), வேலு (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பயணித்த கார் விபத்துக்குள்ளானத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.