தமிழ்நாடு செய்திகள்
பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்- பயணிகள் அவதி
- பேருந்து படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
- தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனையடுத்து அவர்கள் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர். பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கண்டித்ததால் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.