தமிழ்நாடு செய்திகள்

அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-05-14 12:07 IST   |   Update On 2025-05-14 12:07:00 IST
  • அமெரிக்க தூதரகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.
  • போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். இதைத் தொடர்ந்து உஷாரான போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News