தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி- நீதிமன்றம் அதிரடி

Published On 2025-02-19 15:30 IST   |   Update On 2025-02-19 16:18:00 IST
  • திருப்பரங்குன்றம் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
  • ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் எனவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்து ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டன.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் முன்பு வந்தது.

அப்போது, திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்து அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழிகாட்டுத் தலங்கள் குறித்தி வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் எனவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

Tags:    

Similar News