தமிழ்நாடு செய்திகள்

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-09-08 20:43 IST   |   Update On 2025-09-08 20:43:00 IST
  • வீட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.
  • புதிய மாவட்டங்களை உருவாக்கி அரசு மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கினோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைக்கப்பட்ட அதிமுகவின் 126 அடி உயர கொடிக் கம்பத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றினார்.

பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

அவர் பேசியதாவது:-

அதிமுக தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்ததால் இன்றும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.

புதிய மாவட்டங்களை உருவாக்கி அரசு மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கினோம்.

இலவச பேருந்து பயணத்தை ஓசி பயணம் என திமுக முன்னாள் அமைச்சர் கொச்சைப்படுத்தினார்.

திண்டிவனத்தில் அரசு அலுவலரை திமுக பெண் கவுன்சிலரின் காலில் விழ வைத்தனர்.

அதிமுகவுக்கு சாதி, மதம் கிடையாது. அவற்றுக்கு அப்பாற்றப்பட்ட கட்சி அதிமுக.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது; போதைப்பொருள் புழக்கம் தாராளமாக உள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News