தமிழ்நாடு செய்திகள்

சாலையில் இறந்து கிடந்த மாடுகளை காணலாம்.

பெரியகுளம் அருகே அரசு பஸ் மோதியதில் 15 மாடுகள் உயிரிழப்பு

Published On 2025-05-15 14:59 IST   |   Update On 2025-05-15 14:59:00 IST
  • பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • விபத்தில் மேலும் பல மாடுகளின் கால்கள் முறிந்து காயம் ஏற்பட்டன.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கிடை அமர்த்தி வந்தார்.

இந்த நிலையில் மாடுகளை வேறு ஒரு விளைநிலத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்காக ஓட்டிச் சென்றார். அப்போது தேனி-திண்டுக்கல் புறவழிச்சாலையில் சாலையை கடந்து கொண்டிருந்த மாடுகள் மீது அவ்வழியாக வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் 15 மாடுகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தன.

பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் மோதி பலியாகி சாலையில் கிடந்த மாடுகளை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இந்த விபத்தில் மேலும் பல மாடுகளின் கால்கள் முறிந்து காயம் ஏற்பட்டன. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News