தமிழ்நாடு

விஷம் குடித்து வாலிபர் உயிரிழப்பு

Published On 2022-09-28 10:39 GMT   |   Update On 2022-09-28 10:39 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன்.
  • அன்புச்செல்வன் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் அன்புச்செல்வன் (வயது 19), டிப்ளமோ படிப்பு படித்துள்ள இவர், நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News