தமிழ்நாடு

காதலனை 2-வது முறையாக திருமணம் செய்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

Published On 2023-08-19 05:39 GMT   |   Update On 2023-08-19 05:39 GMT
  • 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
  • இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

கோவை:

மதுரையை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் உடுமலை பேட்டையில் உள்ள ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு வேறு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே வாலிபர் வேறுமதத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலனுடன் சிவகாசிக்கு சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி இளம்பெண்ணின் பெற்றோர் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை மீட்ட னர். பின்னர் தங்கள் மகளை திருமணம் செய்ய அவரது பெற்றோர் வாலிபருக்கு சில நிபந்தனைகளை விதித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தனர். மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மணமகனை தேடி வந்தனர்.

இதுகுறித்து இளம்பெண் அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். எப்படியாவது தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் அவரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவில் வைத்து மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் காதல் ஜோடி மாலையுடன் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News