தமிழ்நாடு

கொள்ளையர்கள் நகை பறித்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் படுகாயம்

Published On 2022-10-05 06:52 GMT   |   Update On 2022-10-05 06:52 GMT
  • மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பரிமளா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர்.
  • காயமடைந்த முத்தமிழ் செல்வி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர்:

திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை, சித்தூர் சாலையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி முத்தமிழ் செல்வி. இருவரும் மோட்டார்சைக்கிளில் திருத்தணி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். திருத்தணி மாதா கோயில் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பரிமளா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர்.

இதில் நிலைதடுமாறிய முத்தமிழ்செல்வி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் அங்கு திரண்டனர். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயமடைந்த முத்தமிழ் செல்வி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News