தமிழ்நாடு செய்திகள்

தோழியை பிரிய மறுத்து கழுத்தை அறுத்து கொண்ட பெண் என்ஜினீயர்- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Published On 2022-11-10 09:46 IST   |   Update On 2022-11-10 09:46:00 IST
  • நாளடைவில் ஒருவருக்கு, ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரியமுடியாத நிலைக்கு சென்றனர்.
  • கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெறியேறினர்.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏர்கோல்பட்டியை சேர்ந்தவர் 22 வயது என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் தற்பொழுது கோவை தனியார் தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

அதேபோல் ஏரியூரை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் பயோடெக் 3 ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேலம் தனியார் கல்லூரியில் படித்தபோது ஏரியூரில் இருந்து ஒரே பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ஒருவருக்கு, ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரியமுடியாத நிலைக்கு சென்றனர். இதைத் தெரிந்த பெற்றோர் இவர்களை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெறியேறினர். இது குறித்து மாணவியின் பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் கோவையில் தங்கி இருந்த இருவரையும் மீட்டு ஏரியூருக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவருக்கும் அறிவுரை கூறி இரு வீட்டாரின் பெற்றோரையும் அழைத்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் நேற்று மதியம் கவுன்சிலிங் கொடுப்பதற்காக இருவரையும் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது அனைத்து மகளிர் போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம், நீங்கள் இருவரும் வாழ வேண்டியவர்கள். உங்களுக்கு என்று கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கை இருக்கிறது. இந்த உறவு நம்முடைய கலாசாரத்துக்கு சரிவராது என்று கவுன்சிலிங் கொடுத்ததாக தெரிகிறது.

போலீசாரின் ஆலோசனைக்கு பிறகு, தான் செய்தது தவறு என பெண் என்ஜினீயர் உணர்ந்ததாக தெரிகிறது. உடனே கழிப்பறை செல்வதாக கூறி விட்டு சென்றார்.

இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அவர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்து மற்றும் கைகளை அறுத்துக் கொண்டார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவரது சத்தத்தை கேட்டு போலீசார் சென்று பார்த்தனர்.

அப்போது கழிவறைக்குள் பெண் என்ஜினீயர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு போலீசார் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பென்னாகரம் குற்றவியல் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவினா முன்னிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு பெண்களுக்குள் ஏற்பட்ட முறை தவறிய உறவால் பெண் என்ஜினீயர் தற்கொலைக்கு முயன்றது பென்னாகரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News