தமிழ்நாடு

நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி- கோபால கிருஷ்ண காந்தி

Published On 2023-06-02 05:59 GMT   |   Update On 2023-06-02 07:16 GMT
  • அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி.
  • இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்றார் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என கருணாநிதி எழுதினார்.

நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. கருணாநிதி சன்னதியில் உண்மையை பேச வேண்டும். தற்போது, இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News