தமிழ்நாடு

புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

Published On 2023-11-28 03:21 GMT   |   Update On 2023-11-28 03:21 GMT
  • கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
  • புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர்:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News