தமிழ்நாடு செய்திகள்

மதுரவாயலில் மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி

Published On 2022-10-13 12:10 IST   |   Update On 2022-10-13 12:10:00 IST
  • குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
  • சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.

போரூர்:

மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா இவர்களது மகள் தியா (வயது2).

பூர்ணிமா மகள் தியாவுடன் நேற்று முன்தினம் அருகில் உள்ள அக்கா மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்றார் பின்னர் சகோதரிகள் இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது குழந்தை தியா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள். உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News