தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக தலைமை செயலாளர் உத்தரவு

Published On 2023-10-12 15:16 GMT   |   Update On 2023-10-12 15:16 GMT
  • சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமனம்.
  • டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News