தமிழ்நாடு

தமிழ்நாடு மின்சார வாரியம் 3 ஆக பிரிப்பு: அதிகாரிகள் தகவல்

Published On 2024-03-13 02:59 GMT   |   Update On 2024-03-13 02:59 GMT
  • மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது.
  • கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

சென்னை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 24-ந் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என 3 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, 4 ஆயிரத்து 320 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது. அதேபோல், 2 ஆயிரத்து 321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 41 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்படுகிறது.

கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயபணில் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News