தமிழ்நாடு செய்திகள்

தெற்கு வளர்கிறது - வடக்குக்கும் சேர்த்து வாரி வழங்குகிறது!

Published On 2024-02-15 12:03 IST   |   Update On 2024-02-15 14:44:00 IST
  • இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.
  • நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

சென்னை:

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* எல்லாருக்கும் எல்லாம் என்னும் விதையை விதைத்தவர் பெரியார். அதனை ஆட்சியில் செய்து காட்டியவர் கருணாநிதி.

* இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.

* தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்படுகிறேன்.

* அரசின் உரையை அப்படியே வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. கவர்னர் அவரது அரசியலுக்காக சட்டசபையை பயன்படுத்திக்கொண்டார்.

* திராவிட மாடல் வழித்தடத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

* சிறு பிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்.

* புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். எவர்வரினும் நில்லேன். அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு என் பதில்.

* கலைஞர் இன்று ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே நான் ஆட்சி நடத்தி வருகிறேன்.

* தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில், தமிழகம் 3-வது இடத்தில் உள்ளோம்.

* ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

* இந்திய பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருகிறது, தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது திராவிட மாடலின் சாதனை.

* திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டால் நேரம் போதாது.

* நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

* முதலமைச்சர் பொறுப்புக்கு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை அனைத்தும் சாதனை, முன்னேற்ற மாதங்கள்.

* ஜி.டி.பி.யில் இந்தியா 2ம் இடம்.

* மின்னணு உற்பத்தியில் 6-வது இடம்.

* செஸ் விளையாட்டு, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

* காலை உணவு திட்டத்தை தினத்தந்தி நாளிதழ் "அன்று காமராஜர், இன்று ஸ்டாலின்" என பாராட்டியது.

* ஜி.எஸ்.டி. வரி முறையால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு

* மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை.

* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில் திட்டங்களை தருவதில்லை.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சோக கதையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

* பாஜக உடன் கூட்டணியில் இருந்தபோது பேசாத எதிர்க்கட்சி தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.

Tags:    

Similar News