மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை
2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.28 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழக அரசு விளங்குகிறது
தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
குறைந்த கால நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது
கிராமப்புற பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நதிநீர் பங்கீடு விவகாரங்களை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது: ஆளுநர்
நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது.
மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது- ஆளுநர்
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி உள்ளது - ஆளுநர்
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என தமிழில் கூறி, ஆளுநர் தனது உரையை தொடங்கினார்