மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
ஆளுநர் ஆர்.ரவி. சட்டசபைக்கு வந்ததும் சபையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் வணக்கம் தெரிவித்தார். அதன்பின்னர் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை. ஆளுநருக்கு பேண்டு, வாத்தியங்களுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை
சட்டசபை வளாகத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா, புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ய முடிவு செய்துள்ளன.
2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது