தமிழ்நாடு செய்திகள்

'ஆட்சியில் பங்கு' - சர்ச்சை எழுந்ததால் வீடியோவை நீக்கினார் திருமாவளவன்

Published On 2024-09-14 12:06 IST   |   Update On 2024-09-14 12:06:00 IST
  • திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
  • திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று வன்னியரசு விளக்கம் அளித்து இருந்தார்.

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார்.

திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று அக்கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் தனது வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நீக்கி உள்ளார்.

Tags:    

Similar News