தமிழ்நாடு

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் மழையால் துருபிடித்து வீணாகும் அவலம்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2022-10-11 09:03 GMT   |   Update On 2022-10-11 09:03 GMT
  • கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது இந்த கடைகள் மெரினா கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படவில்லை.
  • மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்த ‘ஸ்மார்ட்’ கடைகளை பார்த்து கவலை அடைந்து வருகிறார்கள்.

சென்னை:

மெரினா கடற்கரையில் "ஸ்மார்ட்" கடைகள் மழையால் துருபிடித்து வீணாகி வருகின்றன.

"சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி மெரினா கடற்கரையில் சிறு வியாபாரிகளுக்காக 900 "ஸ்மார்ட்" கடைகள் சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்டது.

மெரினா கடற்கரையில் ஏற்கனவே வியாபாரம் நடத்தியவர்களுக்கு மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்களை வகை "அ" என்ற அடிப்படையில், 900 கடைகளில் 60 சதவீதம் கடைகள் என 540 கடைகளும், ஏனைய கடை நடத்த விருப்பம் உள்ளவர்கள் வகை "ஆ" என்ற அடிப்படையில் 40 சதவீதம் கடைகள் என 360 கடைகளும் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது இந்த கடைகள் மெரினா கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் இந்த கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள், போராட்டங்கள் நடந்தது. இதனால் கடைகளை வியாபாரிகளுக்கு வழங்காமல் மாநகராட்சி கிடப்பில் போட்டது

தற்போது இந்த "ஸ்மார்ட்" கடைகள் மழையால் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றது. யாருக்கும் பயன் இல்லாமல் கேட்பாரற்று இந்த கடைகள் உள்ளன.

மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்த 'ஸ்மார்ட்' கடைகளை பார்த்து கவலை அடைந்து வருகிறார்கள்.

எனவே இந்த ஸ்மார்ட் கடைகள் மழையால் வீணாவதை தடுத்து மாநகராட்சி இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News