தமிழ்நாடு

நிதானம் இழந்தது ஏன்?

Published On 2023-05-20 08:32 GMT   |   Update On 2023-05-20 08:32 GMT
  • தமிழக அரசியல் தலைவர்களில் மிக மிக நிதானமானவர் என்ற சிறப்பை பெற்றிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
  • மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் சரி, வேதனையை வெளிப்படுத்தினாலும் சரி அவரிடம் ஒரு சமநிலையை எப்போதும் பார்க்கலாம்.

தமிழக அரசியல் தலைவர்களில் மிக மிக நிதானமானவர் என்ற சிறப்பை பெற்றிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். எந்த ஒரு கூட்டத்திலும், எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் வார்த்தைகளை நுணுக்கமாக அளந்து பேசுவார்.

அவர் வைக்கும் பதில் உரைகள் ஆணித்தரமாக இருக்கும். ஆதாரங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் சரி, வேதனையை வெளிப்படுத்தினாலும் சரி அவரிடம் ஒரு சமநிலையை எப்போதும் பார்க்கலாம்.

அத்தகைய பக்குவம் மிகுந்தவர் சமீபத்தில் சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மைக் வேலை செய்யாததால் நிதானம் இழந்தார். மைக் இணைப்பில் அதிக சத்தம் வந்ததால் அவரது நிதானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதுபற்றி விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் பொது இடங்களில் தங்களது நிலையை எண்ணிப்பார்க்காமல் நடந்துள்ளனர். எங்கள் தலைவர் மைக் வேலை செய்யாததால் சற்று ஆவேசமானார். இதில் எந்த குறையையும் சொல்ல முடியாது' என்றனர்.

Tags:    

Similar News