தமிழ்நாடு

பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு

Published On 2023-12-23 09:20 GMT   |   Update On 2023-12-23 09:20 GMT
  • ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் 100 கன அடி மட்டும் திறக்கப்பட உள்ளது.
  • செம்பரம்பாக்கம் ஏரியில் 3220 மில்லியன் கன அடி நீரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர்;

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

இதன் மொத்த கொள்ளளவு, 3231 மில்லியன் கன அடி, நீர்மட்டம் 35 அடி ஆகும். பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்தது.

தற்போது மழை நின்றதால் நீர்வரத்து ஏரிக்கு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 200 கன அடி நீர் மட்டும் வந்து கொண்டு இருக்கிறது.

ஏரியில் தற்போது 3058 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்மட்டம் 34.73 அடியாக (மொத்தம் உயரம் 35 அடி) உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் 100 கன அடி மட்டும் திறக்கப்பட உள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் 6 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதேபோல் புழல் ஏரியில் 3018 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3220 மில்லியன் கன அடி நீரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News