தமிழ்நாடு

ஜெயிலில் மது அருந்திய சிறைக்காவலர்

Published On 2023-11-29 06:14 GMT   |   Update On 2023-11-29 12:23 GMT
  • பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • சிறைக் காவலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் கிளை ஜெயில் உள்ளது.

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றும் சிறை காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் மது அருந்திவிட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தொந்தரவு செய்வதாகவும், அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் அவர் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிறைக் காவலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News