தமிழ்நாடு

மது போதையில் மோதல்: தந்தை கழுத்து அறுத்து கொலை- ஓட்டல் ஊழியர் வெறிச்செயல்

Published On 2023-08-25 04:11 GMT   |   Update On 2023-08-25 04:11 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
  • குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் கொசப்பேட்டை, மாசிலா மணி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவரது மகன் சரத்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.

இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் சரத்குமார் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தேவராஜிக்கும், சரத்குமாருக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் தேவராஜ் தன் மகன் சரத்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை தேவராஜ் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த தேவராஜியின் மனைவி மற்றும் மகள் அலறியடித்துக்கொண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று தேவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.

குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News