தமிழ்நாடு
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடரும் விபரீதம்- இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
- மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி, சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த பந்தனமாஜி என்கிற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்ததாகவும், மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.