திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு மனநிலை பாதித்த பெண் படுகொலை
- கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மனநிலை பாதித்த பெண்ணை கொன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி-மங்கலம் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவர் தங்கியிருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதையடுத்து உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை அங்குள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிக்கு தரதரவென இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இன்று காலை பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்தவரின் உருவம் மற்றும் பெண்ணின் உடலை இழுத்து செல்லும் காட்சிகள் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர். மனநிலை பாதித்த பெண்ணை கொன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.