தமிழ்நாடு
தமிழக முதல்வர் பிரசாந்த் கிஷோரா...?- சீமான்
- பிரசாந்த் கிஷோர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கப் போகிறார்.
- தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும். நான் தமிழன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:-
"வட மாநிலத்தவர்கள் தான் இதுவரை தமிழ் மக்களை தாக்கியுள்ளனர். பிரசாந்த் கிஷோர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கப் போகிறார். அதனால் பீகார் மாநில மக்களுக்கு ஆதரவாக எதையாவது பேசுகிறார். அவருக்கு தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும். நான் தமிழன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன்.
நான் பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி, அவர் அங்கிருந்து டுவிட்டரில் பதிவிட்டு, இங்கிருக்கும் காவல் துறை உடனே வழக்கு பதிவும் செய்து, அவரிடம் தகவல் சொல்கிறது. இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பீகாரில் இருக்கும் அவர் தான் என்பது இப்போது தான் தெரிகிறது" என்றார்.