தமிழ்நாடு

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 540 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

Published On 2024-04-20 05:59 GMT   |   Update On 2024-04-20 05:59 GMT
  • வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
  • கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை:

தென்சென்னை தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராணிமேரி கல்லூரியில் 172 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 கேமராக்களும், லயோலா கல்லூரியில் 188 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News