தமிழ்நாடு

கோடை விடுமுறை - பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

Published On 2024-05-24 07:47 GMT   |   Update On 2024-05-24 07:53 GMT
  • கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
  • பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முடிவடைந்தது. இதையடுத்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜூன் மாதம் 4-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. மேலும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பள்ளிகள் வரும் ஜூன் 4-ந்தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

2024-25-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 4-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News