தமிழ்நாடு

ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு

Published On 2024-05-25 03:14 GMT   |   Update On 2024-05-25 03:14 GMT
  • நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்காளதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்காள கடற்கரையை கடக்கக்கூடும்.
  • கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது. அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'ரீமால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று மாலை வலுப்பெற உள்ளது.

அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு தீவிர புயலாக வங்காளதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்காள கடற்கரையை கடக்கக்கூடும். கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த ரீமால் புயலின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு என்பது குறைவு என்றும், மாறாக தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News