தமிழ்நாடு

சிறப்பு பேருந்துகள் - சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு இங்கிருந்து செல்லலாம்...

Published On 2024-01-12 06:17 GMT   |   Update On 2024-01-12 06:17 GMT
  • கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கம்.
  • ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு.

சென்னை :

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று முதல் 14-ந்தேதி வரை இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்கள் வருமாறு:-

* மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கம்.

* கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கம்.

* தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (MEPZ) இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து TNSTC வழித்தட பேருந்துகள். (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீங்கலாக)

* வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி நிறுத்தம் குருகுலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.

* பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.



* புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம். கோயம்பேட்டில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி கோட்டத்தை சார்ந்த பேருந்துகள் கீழ்கண்ட தட பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திட்டக்குடி, காரைக்குடி திருப்பூர். பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துத் கழகத்தை சார்ந்த பேருந்துகள் பெங்களூரு மற்றும் ECR மார்க்கமாக இயக்கப்படும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி.

* கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து (KCBT) இயக்கப்படும் பேருந்துகள்:- தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த கீழ்கண்ட தடங்கள்.

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம் கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த / முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிய மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிக்க (2007 கட்டுப்பாட்டு அறை) 94450 14450, 94450 14436

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் குறித்து புகார் தெரிவிக்க (2637 கட்டுப்பாட்டு அறை) 1800 425 6151 )Toll Free Number மற்றும் (044-24749002, 044-26280445, 044-26281611)

Tags:    

Similar News