தமிழ்நாடு

ரூ.79 ஆயிரம் செலுத்தி ட்ரோன் கேமரா வாங்க ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published On 2022-09-27 12:08 GMT   |   Update On 2022-09-27 12:15 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன்.
  • ஆன்லைன் செயலி மூலம் ரூ.79 ஆயிரத்துக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20-ந் தேதி ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (வயது 35). ஏ.சி மெக்கானிக்கான இவர், தனது நண்பர் சுரேசுக்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடியுள்ளார்.

அப்போது ஆன்லைன் செயலி மூலம் ரூ.79 ஆயிரத்துக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20-ந் தேதி ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வந்த கேமரா பார்சலை பிரித்து பார்த்தபோது, ரூ.100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் இது குறித்து ஆன்லைன் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Similar News