தமிழ்நாடு

இது நம்ம சென்னை, நம்ம செஸ்: விழிப்புணர்வு பேருந்துகளை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்

Published On 2022-07-01 09:46 GMT   |   Update On 2022-07-01 09:46 GMT
  • 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
  • ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.


44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி புகழ் வாய்ந்த 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.6.2022 அன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பேருந்துகளிலும், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 பேருந்துகளிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் "நம்ம செஸ், நம்ம பெருமை" - "இது நம்ம சென்னை, நம்ம செஸ்" - "வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு" போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டு உள்ளது. இந்த 15 பஸ்களை சென்னை மெரீனாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News