தமிழ்நாடு செய்திகள்

அயப்பாக்கத்தில் ரூ.7½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர்கள் எ.வ.வேலு - மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்

Published On 2023-07-29 15:01 IST   |   Update On 2023-07-29 15:20:00 IST
  • மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
  • தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

சென்னை:

ஆவடி அருகே அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஆவடி அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் விழா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.கணபதி, அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் அ.ம.துரைவீரமணி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் அண்ணா சாலை வரை ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.54 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை டி.ஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் கேடயம், விலையில்லா மிதிவண்டி ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மேலும் நல்லாசிரியர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்திரா, முதன்மைக்கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News