தமிழ்நாடு

அண்ணாமலை வெளியிடுவது சொத்து பட்டியலே தவிர ஊழல் பட்டியல் இல்லை- அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

Published On 2023-07-26 07:31 GMT   |   Update On 2023-07-26 07:31 GMT
  • திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 பேர் பூர்த்தி செய்து அதனை முகாம்களில் வழங்கி உள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரூ.20.86 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி மற்றும் ரூ.18 கோடி மதிப்பில் உயர் மின் கோபுர தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக 1,135 முகாம்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 பேர் பூர்த்தி செய்து அதனை முகாம்களில் வழங்கி உள்ளனர் என்றார்.

அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. பைல்ஸ்-2 வெளியிடுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியலைத்தான் வெளியிடுகிறாரே தவிர, ஊழல் பட்டியல் இல்லை. எனினும் அதனை சட்டப்படி சந்திப்போம் என்றார்.

அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , கலெக்டர் கிறிஸ்துராஜ் , ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News