தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.