தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியை எட்டியது

Published On 2023-10-22 09:35 IST   |   Update On 2023-10-22 09:35:00 IST
  • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த 10-ந்தேதி காலையுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அதே நேரம் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 288 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2369 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1733 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையின் நீர்மட்டம் 74.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 2482 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2033 கனஅடியாக குறைக்கப்பட்டது.

Tags:    

Similar News