தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு

Published On 2023-07-11 11:37 IST   |   Update On 2023-07-11 11:37:00 IST
  • அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
  • நேற்று 81.32 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 80.29 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 400 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 152 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 198 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 81.32 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 80.29 அடியாக சரிந்துள்ளது.

Tags:    

Similar News